×

திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

 

உடுமலை மார்ச்17: தேசிய திறனாய்வு தேர்வில் வெஞ்சமடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சார்ந்த 2 மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழக அளவில் 164 வது இடத்தையும் திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாவது இடத்தையும் பெற்று ம.தனலட்சுமி என்ற மாணவி தேர்ச்சி அடைந்துள்ளார். இலக்கியா என்ற மாணவியும் தேர்ச்சி பெற்றுள்ளார். மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்த ம.தனலட்சுமி என்ற மாணவி சென்னையில் உள்ள தகைசால் மாதிரி பள்ளிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாணவிகளை தலைமை ஆசிரியை அருள் ஜோதி மற்றும் உதவி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், சக மாணவிகள் பாராட்டினர்.

 

The post திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Venchamaida Panchayat Union Middle School ,M. Thanalakshmi ,Tamil Nadu ,Tirupur ,
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு