×

தீயில் கருகிய மூதாட்டி சாவு

 

கோவை, மார்ச் 17: கோவை வடவள்ளி குருசாமி நகரை சேர்ந்தவர் ரோஹினி (76). ஓய்வுபெற்ற வங்கி ஊழியர். இவர், கடந்த மாதம் 23ம் தேதி காஸ் அடுப்பில் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீ பிடித்தது. உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் தீயை அணைத்து அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உடலில் பலத்த தீ காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

The post தீயில் கருகிய மூதாட்டி சாவு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Rohini ,Vadavalli Kuruswamy Nagar, ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்