×

வாலிபரை சரமாரி தாக்கிய 3 பேர் கைது

சேலம், மார்ச் 17: சேலம் குகை பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் (28). இவர் சோலார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம், நெத்திமேடு அருகே டூவீலரில் சென்றார். அப்போது அங்கு 3 பேர் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் மீது மோதுவது போல், அசோக்குமாரின் டூவீலர் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் 3 பேரும், அசோக்குமாரை வழிமறித்து கேள்வி கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், 3 பேரும் சேர்ந்து அசோக்குமாரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி அவர் அளித்த புகாரின் பேரில், அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி, அசோக்குமாரை தாக்கிய அல்லிக்குட்டையைச் சேர்ந்த ராஜேஸ்குமார்(32), கண்ணகி தெரு சரத்குமார்(32), அல்லிக்குட்டை காலனி பிரவீன்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

The post வாலிபரை சரமாரி தாக்கிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Ashokumar ,Salem Cave ,Nethimedu ,
× RELATED நீலகிரி அதிமுக வேட்பாளர் சேலத்தில் வாக்களித்தார்