×

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

விருதுநகர், மார்ச் 17: விருதுநகர் கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் அனைவரும் நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். வாக்காளர்கள் அனைவரும் நூறு சதவிகிதம் வாக்களிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி நகரின் முக்கிய வீதிகள் விழியாக மாணவர்கள் துண்டு பிரசுங்களை விநியோகித்தும், விழிப்புணர் கோஷம் எழுப்பி சென்றனர்.

The post நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : awareness ,Virudhunagar ,Collector ,Jayaseelan ,Virudhunagar KVS High School ,Parliamentary Elections ,Voter Awareness Rally ,
× RELATED 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி