×

லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல், மார்ச் 17: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு தவுடு லோடு ஏற்றிய லாரி ஒன்று பழநிஅந்த லாரி நேற்று காலை காலை 7 மணியளவில் திண்டுக்கல்- பழநி ரோட்டில் உள்ள ராமையன்பட்டி அருகே வளைவில் வந்த போது திடீரென லாரியின் முன்பக்க டயர் ரோட்டின் தடுப்பு சுவர் மீது ஏறியது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, ரோட்டின் நடுவில் கவிழ்ந்தது.
இந்த விபத்தின் போது அதிர்ஷ்ட வசமாக அவ்வழியே வாகனங்கள் எதுவும் வரவில்லை.

அவ்வாறு வந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். இந்த விபத்தில் டிரைவர் செந்தில் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்ததும் தாடிக்கொம்பு போலீசார் மற்றும் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்து வாகனங்களை அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

The post லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Karaikudi ,Sivagangai district ,Ramayanpatti ,Dindigul-Palani road ,
× RELATED எஸ்ஐ கர்ப்பமாக்கியதாக பெண் போலீஸ் தர்ணா