×

சிஏஏவை திரும்ப பெறக்கோரி ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை / மேலூர், மார்ச் 16: ஒன்றிய அரசால் அமல்படுத்தப்பட்ட சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, மதுரை மற்றும் மேலூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன்படி மதுரை கோரிப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் பிலால்தீன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜாபர் சுல்தான், தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல்ஹமீது முன்னிலை வகித்தனர்.

இதில் பங்கேற்றோர் ஒன்றிய அரசால் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதேபோல் இதே கோரிக்கையை வலியுறுத்தி இஸ்லாமிய மாணவர் அமைப்பு சார்பில் ஓபுளா படித்துரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் அப்துல்கபூர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலூர், பெரிய பள்ளிவாசல் அருகே சிஏஏ சட்டத்தை ரத்து செய்யக்கோரி எஸ்டிபிஐ சார்பில் ஒன்றிய அரசுக்கு எதிராக நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி தலைவர் முகமது தாஹா தலைமையில் தாங்கினார். மதுரை வடக்கு மாவட்ட பொது செயலாளர் ஜியாவுதீன், மேலூர் பெரிய பள்ளிவாசல் இமாம் சர்புதீன் முப்தி கண்டன உரையாற்றினர். எஸ்டிடியு மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மன்சூர், மணியக்கார கிளை ஒருங்கிணைப்பாளர் ஆசிக், மேலூர் தொகுதி துணை செயலாளர் ராஜா முகமது உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

The post சிஏஏவை திரும்ப பெறக்கோரி ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Union Government ,CAA ,Madurai ,Melur ,STBI ,Dinakaran ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...