×

மன்னார்குடி அருகே காளியம்மன் கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி திருடியவர் கைது

 

மன்னார்குடி, மார்ச்16: மன்னார்குடி அடுத்த நெடுவாக்கோட்டையில் கிராம தெய்வமான காளியம்மன் கோயிலில் வீரையன் (63) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார்.கடந்த 10ம் தேதி இக்கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் சாமி கும்பிடுவது போல் நடித்து அம்மன் கழுத்தில் கிடந்த 6கிராம் மதிப்பிலான தங்க தாலியை திருடி சென்றார். கோயில் பூசாரி மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் டவுன் எஸ்ஐ  நிதி உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிந்தனர். டிஎஸ்பி அஸ்வத் ஆன்டோ ஆரோக்கியராஜ் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் பாபநாசம் அடுத்த கோவிலூர் வள்ளி நகர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (27) என்பவரை போலீசார் பிடித்தனர். விசாரனையில் நெடுவாக்கோட்டை காளியம்மன் கோயிலில் அம்மன் கழுத்தில் கிடந்த தங்க தாலியை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து 6 கிராம் தங்க தாலியை கைப்பற்றினர். மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பிரகாஷை ஆஜர் படுத்திய போலீசார் நீதிபதி உத்தரவின் பேரில் கிளைச்சிறையில் அடைத்தனர். இதுகுறித்து, மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் கூறுகையில், திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களை தடுக்கும் வகையில் ரோந்து பணியில் காவலர்கள் அதிக அளவில் ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றனர். பொதுமக்களை அச்சுறு த்தும் வகையில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். மேலும், நெடுவாக்கோட்டை கோயில் திருட்டில் ஈடுபட்ட நபரை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்பி பாராட்டினார்.

The post மன்னார்குடி அருகே காளியம்மன் கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kaliamman ,Mannargudi ,Veerayan ,Neduvakottai ,Sami ,Dinakaran ,
× RELATED திருமலாபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்