×

சிறுமிக்கு பாலியல் தொல்லை மெக்கானிக்கிற்கு 2 ஆண்டு சிறை புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

புதுச்சேரி, மார்ச் 16: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாஷிங் மிஷின் மெக்கானிக்கிற்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. புதுச்சேரி குருமாம்பேட் பகுதியை சேர்ந்தவர் பாவாடைராயன் (38). கடந்த 2023ல் இவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாவாடைராயனை கைது செய்தனர். புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கினை நீதிபதி சோபனா தேவி விசாரித்து, குற்றவாளி பாவாடைராயனுக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை மெக்கானிக்கிற்கு 2 ஆண்டு சிறை புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Puducherry POCSO ,Bhavatairayan ,Kurumamped ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு