சென்னை : சென்னை யானை கவுனி மேம்பாலத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார். 520 மீ நீளம், 20 மீ அகலத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. 2021ல் அடிக்கல் நாட்டப்பட்டு, பழைய ரயில்வே மேம்பாலம் இடிக்கப்பட்டு புதிய மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வால்டாக்ஸ் சாலையில் இருந்து ராஜமுத்தையா சாலையை (நேரு ஸ்டேடியம் அருகில்) இந்த மேம்பாலம் இணைக்கிறது.
The post சென்னை யானை கவுனி மேம்பாலத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் அமைச்சர் சேகர்பாபு!! appeared first on Dinakaran.