×

கொத்தவாசல் கிராமத்தில் பதுக்கிவைத்து மது விற்றவர் கைது

 

குன்னம், மார்ச் 15: கொத்தவாசல் கிராமத்தில் பதுக்கி வைத்து மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள கொத்தவாசல் பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபான பாட்டில்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு விற்கப்படுவதாக பெரம்பலூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மது விலக்கு இன்ஸ்பெக்டர் லதா, தலைமையில் போலீசார் கொத்தவாசல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது மாயாண்டி(49) என்பவர் வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக அரசு மதுபானபாட்டில்கள் விற்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மதுபாட்டில்களை விற்றுக்கொண்டிருந்த மணியை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து 19 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post கொத்தவாசல் கிராமத்தில் பதுக்கிவைத்து மது விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kottawasal ,Kunnam ,PERAMBALUR ABSTINENCE POLICE ,KOTHAWASAL ,PERAMBALUR DISTRICT ,
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...