×

மாணவனை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

 

விருதுநகர், மார்ச் 15: கல்லூரி மாணவரை தாக்கிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் சத்தியபாலா(20). இவர் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடித்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது அல்லம்பட்டி முக்கு ரோட்டில் செல்லும் போது அல்லம்பட்டியை சேர்ந்த அருள்பதி, பாரதி, ஜெபிரி ஆகிய 3 பேரும் சேர்ந்து சத்தியபாலாவை அவதூறாக பேசி தாக்கி உள்ளனர். காயமடைந்த சத்தியபாலா விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது கிழக்கு போலீசில் அளித்த புகாரில் அருள்பதி, பாரதி, ஜெபிரி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மாணவனை தாக்கிய 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Sathyapala ,Allambatti, Virudhunagar ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...