×

தேனியில் இரண்டாவது புத்தக திருவிழா நிறைவு: அதிகாரிகளுக்கு கலெக்டர் பாராட்டு

 

தேனி, மார்ச் 15: தேனியில் 10 நாட்கள் நடைபெற்று வந்த புத்தக திருவிழா நிறைவடைந்தது. இதையடுத்து திருவிழாவில் பங்கேற்ற அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் கலெக்டர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் மில் வளாகத்தில் 2ம் ஆண்டு புத்தக திருவிழா கடந்த 3ம் தேதி தொடங்கி கடந்த 12ம் தேதி வரை 10 நாட்கள் நடந்தது.

இதில் சுமார் 64 அரங்கங்கள் அமைக்கப்பட்டு, அதில் பல்வேறு புத்தக பதிப்பகங்கள் சார்பில் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனையகம் நடத்தப்பட்டது. மேலும், அரசு துறை சார்பில் கண்காட்சிகளும் வைக்கப்பட்டிருந்தன. நாள்தோறும் மாலையில் திருவிழா நடந்த விழா வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், விவாத நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இப்புத்தகத் திருவிழாவில் சிறப்பாக பணிபுரிந்த அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் பரிசளிப்பு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினார். இதில் டிஆர்ஓ ஜெயபாரதி, ஏடிஎஸ்பி சுகுமார், மகளிர் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post தேனியில் இரண்டாவது புத்தக திருவிழா நிறைவு: அதிகாரிகளுக்கு கலெக்டர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Theni ,10-day Book Festival ,Palanisettipatti ,Theni: ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு