×

குழந்தையை கடத்தியதாக வதந்தி பரப்பியவர் கைது

 

காரைக்குடி, மார்ச் 15: புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக வாட்ஸ் ஆப்பில் வதந்தி கடந்த சில நாட்களாக பரப்பப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்து போலியாக பரப்பப்பட்டு வருவதை கண்டறிந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை காரைக்குடி பகுதியில் உள்ள வாட்ஸ் ஆப் குரூப்பில் குழந்தை கடத்தப்பட்டதாக வதந்தி பரப்பப்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது.

எஸ்.பி டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், எஸ்.ஐ ராமசுப்பு ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் காரைக்குடி மண்ணின் மைந்தர்கள் என்ற வாட்ஸ் ஆப் குரூப்பில் தவறாக தகவலை பரப்பியதற்காக காரைக்குடி கம்பன் நகரை சேர்ந்த ராஜாமுகமது இப்ராகிம் (43) என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் கூறுகையில், குழந்தை கடத்தல் வதந்திகளை பதிவிடுவோர் மற்றும் பகிரப்படுவோர் குறித்து உடனடியாக அருகில் உள்ள காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். இது வதந்தி உண்மையானது அல்ல என்பதை அறிந்து சுமூகமாக இருக்கலாம். இது தொடாபான புகார்களுக்கு 94981 01702 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

The post குழந்தையை கடத்தியதாக வதந்தி பரப்பியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Thirumayat ,Pudukottai district ,
× RELATED தப்பியோடிய கைதி 2 மணி நேரத்தில் கைது