×

20 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு ₹15.84 லட்சம் இழப்பீடு வசூல்

சென்னை, மார்ச் 15: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகள், அரக்கோணம் பகுதியில் கடந்த பிப்.28ம் தேதி ஆய்வு மேற்கொண்ட போது 20 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இழப்பீட்டு தொகையாக 15 லட்சத்து 6 ஆயிரத்து 571 ரூபாய், மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரச தொகை ₹78,000 செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை செயற்பொறியாளர்/ அமலாக்கம்/ சென்னை கைபேசி 9445857591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம், என, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

The post 20 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு ₹15.84 லட்சம் இழப்பீடு வசூல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Power Generation and Distribution Corporation ,Arakkonam ,
× RELATED பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன்...