×

கஞ்சா பறிமுதல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

திண்டுக்கல், மார்ச் 15: திண்டுக்கல் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி பெனசீர் பாத்திமா, இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி மற்றும் போலீசார் கடந்த ஜனவரி மாதம் நிலக்கோட்டை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அணைப்பட்டி பகுதியில் கஞ்சா விற்ற மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, நடுப்பட்டியை சேர்ந்த மகேந்திரன், ஆனந்த் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதில் நடுபட்டியை விவேக் (32) என்பவரிடம் கஞ்சாவை மொத்தமாக வாங்கி சில்லரையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விவேக் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் நடுப்பட்டியில் பதுங்கி இருந்த விவேக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா பறிமுதல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Absconder ,Dindigul ,Dindigul Narcotics Intelligence Unit ,DSP ,Benaseer Fatima ,Inspector ,Vijayakumari ,Nilakottai ,Madurai ,Dampatti ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...