×

மகாராஷ்டிரா கொள்ளையர்கள் அட்டகாசம்; குண்டு பாய்ந்த நிலையில் பேருந்தை ஓட்டி சென்ற டிரைவர்: 35 பயணிகளின் உயிரை காப்பாற்றியதால் பாராட்டு

நாக்பூர்: மகாராஷ்டிராவில் கொள்ளையர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு குண்டு பாய்ந்த நிலையில் பேருந்தை ஓட்டிச் சென்ற டிரைவரை பலரும் பாராட்டி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி – நாக்பூர் இடையேயான நெடுஞ்சாலையில், 35 பயணிகளை ஏற்றிக் கொண்டு ேபருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. குறிப்பிட்ட இடத்தில் பேருந்து நிற்காததால், அப்பகுதியில் நின்றிருந்த கொள்ளையர்கள் பேருந்து டிரைவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அப்போது டிரைவரின் உள்ளங்கையைத் துளைத்துக் கொண்டு தோட்டா பாய்ந்து சென்றது.

ரத்தம் சொட்ட சொட்ட, அந்த டிரைவர் பேருந்தை ஓட்டிக் கொண்டே சென்றார். அந்த இடத்தில் பேருந்தை நிறுத்தவில்லை. காவல் நிலையம் வரை பேருந்தை ஓட்டிக் கொண்ேட சென்றார். அங்கிருந்த காவலர்கள் டிரைவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதேநேரம் 35 பயணிகளின் உயிரை காப்பதற்காக, துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் பேருந்தை ஓட்டிக் கொண்டே சென்ற டிரைவரை வெகுவாக பாராட்டினர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பேருந்து டிரைவரின் உள்ளங்கையில் குண்டு பாய்ந்த நிலையில், சினிமா பட பாணியில் அவர் பேருந்தின் ஸ்டீயரிங்கில் இருந்து கையை எடுக்கவில்லை. அதே நிலையில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு பேருந்தை காவல் நிலையம் வரை ஓட்டி வந்தார். சிசிடிவி வீடியோ காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வருகிறோம். பேருந்தை துரத்தி வந்த கொள்ளையர்கள், சம்பவ நாளன்று மற்றொரு லாரியை மடக்கி நிறுத்தி ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இரு சம்பவங்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

The post மகாராஷ்டிரா கொள்ளையர்கள் அட்டகாசம்; குண்டு பாய்ந்த நிலையில் பேருந்தை ஓட்டி சென்ற டிரைவர்: 35 பயணிகளின் உயிரை காப்பாற்றியதால் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Nagpur ,Maharashtra ,Amaravati-Nagpur ,Dinakaran ,
× RELATED சிஏஜி அம்பலப்படுத்திய மோடி அரசின்...