×

புதிய அரசு விரைவு பஸ் இயக்கம்

 

ஓசூர், மார்ச் 13: ஓசூரில் இருந்து திருச்சிக்கு புதிய அரசு விரைவு பஸ் இயக்கத்தை பிரகாஷ் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.ஓசூரிலிருந்து திருச்சிக்கு புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, ஓசூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து திருச்சி வரை புதிய அரசு விரைவு பஸ் இயக்கத்தை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட பொருளாளர் சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, பொதுக்குழு உறுப்பினர் தனலட்சுமி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சீனிவாசன், ஒசூர் ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, அஞ்செட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, பகுதி செயலாளர் ராமு, சுகாதார நிலைக்குழு தலைவர் மாதேஷ்வரன், மாநகர நிர்வாகிகள் செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன், தியாகராஜன், சாந்தி, மண்டல குழு தலைவர் ரவி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் சுமன், கண்ணன், ராமய்யா, முனிராஜ், ராஜா, மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள், இக்ரம்அகமத், சக்திவேல், மாநகர, பகுதி, வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post புதிய அரசு விரைவு பஸ் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Hosur ,Prakash MLA ,Trichy ,Dinakaran ,
× RELATED வெயிலுக்கு தானாக எரிந்த பைக்குகள்