- ஈரோடு
- கலெக்டர்
- ராஜகோபால் சுங்கரா
- ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல்
- துறை
- முகாம்
- தின மலர்
ஈரோடு, மார்ச் 13: எதிர்வரும் மார்ச் 15ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் 3வது வாரம் வெள்ளிக்கிழமை, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு தனியார்துறை வேலை அளிப்பவர்கள் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான எழுத படிக்க தெரிந்த நபர்கள் முதல் பட்டப் படிப்பு படித்த நபர்கள் வரை மற்றும் செவிலியர்கள், டெய்லர்கள், கணினி இயக்குபவர்கள், தட்டச்சர்கள், ஓட்டுநர்கள் போன்ற பணிகளுக்கு தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்து வருகின்றனர். இதன் மூலமாக மாதந்தோறும் 100க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர்.
மேலும், திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டு, அதற்குத் தேவையான நபர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து வருகின்றனர். இதன்படி இம்மாதத்துக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 15ம் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. இது முற்றிலும் இலவசமாகும். எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய விருப்பமுள்ளோர் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், இம்முகாமின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் வேலை வாய்ப்பு பெறுவோரின் அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தை நேரிலோ அல்லது 86754 12356, 94990 55942 என்ற தொலைபேசி எண்களிலோ, erodemegajobfair@gmail.com மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
The post தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.