×

வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு

 

கோவை, மார்ச் 13: கோவை ஜி.என். மில்ஸ் உழைப்பாளர் தெருவை சேர்ந்தவர்கள் சரத் (32) மற்றும் பிஸ்மி (44). நண்பர்களான இவர்கள் இருவரும் வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இரவு இருவரும் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். வெள்ளக்கிணறு ரயில்வே கேட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது 4 பேர் அவர்களை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினர்.

அவர்கள் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிஸ்மியை தாக்கினர். இதில் தலையில் காயமடைந்த அவர் வலியால் அலறினார். பின்னர் அக்கும்பல் அவரது செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றது. இது குறித்து சரத், தனது நிறுவன உரிமையாளரை செல்போனில் தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார். அவர் விரைந்து வந்து தாக்குதலில் காயமடைந்த பிஸ்மியை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். இது குறித்து சரத் துடியலூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,G.N. Sarath ,Bismi ,Mills Labor Street ,Vellakinaru ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்