×

கள் விற்ற 2 பேர் கைது

புவனகிரி, மார்ச் 13: கிள்ளை பகுதியில் அனுமதியின்றி கள் இறக்கி விற்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து கிள்ளை சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த சொக்கநாதன்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்கிற பெரியசாமி(45), மற்றும் செல்வராஜ்(50) ஆகிய இருவரும் அனுமதியின்றி கள் இறக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கள் விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Bhubaneswar ,Killai ,Sub-Inspector ,Shankar ,Kumar ,Sokkanathanputhur ,Rajapalayam ,Virudhunagar district ,Dinakaran ,
× RELATED சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது