×

வீடு புகுந்து 6 பவுன் நகை, வெள்ளி விளக்கு திருட்டு

மங்கலம்பேட்டை, மார்ச் 13: கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகேயுள்ள விஜயமாநகரம், பாடசாலை வீதியை சேர்ந்த சக்திவேல் மனைவி செல்வகுமாரி (38). இவர் கடந்த 9ம் தேதி நெய்வேலி அருகிலுள்ள கோட்டகம் கிராமத்திலுள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பக்கத்து வீட்டில் வசிக்கும், செல்வகுமாரியின் உறவினரான மல்லிகா என்பவர் செல்வகுமாரியின் வீட்டை பார்த்தபோது சந்தேகமடைந்து செல்வகுமாரிக்கு அலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார். அதையடுத்து தனது அம்மா வீட்டில் இருந்து விஜயமாநகரம் வந்த செல்வகுமாரி பீரோவில் வைத்திருந்த நகைகளை தேடி பார்த்தபோது செயின், தோடு, மாட்டல் உள்பட 6.25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி விளக்கு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்ததன்பேரில் அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீடு புகுந்து 6 பவுன் நகை, வெள்ளி விளக்கு திருட்டு appeared first on Dinakaran.

Tags : Mangalampet ,Sakthivel ,Selva Kumari ,School Street, Vijayamanagaram ,Mangalampet, Cuddalore district ,Kotakam ,Neyveli ,Dinakaran ,
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்