×

குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 221 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை

 

நாகப்பட்டினம்,மார்ச் 12: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை வகித்தார். வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 221 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இலவச தையல் இயந்திரம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைக்கான அடையாள அட்டை ஆகியவற்றை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார். டிஆர்ஓ பேபி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

The post குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 221 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Janitam Varghese ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்