×

பசுவந்தனை அருகே முன்விரோதத்தில் உறவினரை தாக்கி கொலை மிரட்டல்

 

ஓட்டப்பிடாரம், மார்ச் 11: பசுவந்தனை அருகே முன் விரோதம் காரணமாக உறவினரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகேயுள்ள அச்சங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் (58). இவருக்கும், அவரது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த வள்ளிநாயகம் (43) என்பவருக்கும் ஏற்கனவே விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வள்ளிநாயகம், ராஜை அரிவாளால் தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்துச் சென்றார். பின்னர் இதுகுறித்து ராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த பசுவந்தனை போலீசார், மிரட்டல் விடுத்த வள்ளிநாயகத்தை கைது செய்தனர்.

 

The post பசுவந்தனை அருகே முன்விரோதத்தில் உறவினரை தாக்கி கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Pashuvantana ,Ottapidaram ,Pasuvantana ,Raj ,Acchankulam ,Pasuvanthana ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED ஓட்டப்பிடாரம் அருகே பேவர் பிளாக் சாலை பணி தொடக்கம்