×

திமுக சார்பில் மகளிர் தின கோலப்போட்டி

 

இடைப்பாடி, மார்ச் 11: இடைப்பாடி, கொங்கணாபுரத்தில் திமுக சார்பில் மகளிர் தின கோலப்போட்டி நடைபெற்றது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, திமுக சார்பில் பல்வேறு இடங்களில் கோலப்போட்டி நடத்தப்பட்டது. இடைப்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் பாஷா தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட துணை செயலாளர் சுந்தரம், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சித்ரா ராமகிருஷ்ணன், நகர அவைத்தலைவர் மாதையன், வடிவேலு, சாமியப்பன், கீதா முருகன் மற்றும் சிங்காரவேலு, ராஜா சண்முகம், செந்தில்குமார், ராஜமாணிக்கம் சின்னதுரை, மணிகண்டன், ராமசுந்தரம், ரமேஷ், பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர்.

போட்டியில் பெண்கள் திரளாக பங்கேற்று கோலமிட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு முதல்பரிசாக ரூ. 5 ஆயிரம், 2ம் பரிசாக ரூ. 3 ஆயிரம், 3ம் பரிசாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டது. கொங்கணாபுரத்தில் நடைபெற்ற கோலப்போட்டிக்கு, மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், ஒன்றிய செயலாளர் பரமசிவம், பேரூர் செயலாளர் அர்த்தநாரீஸ்வரன், பேரூராட்சி தலைவர் சுந்தரம் ஆகியோர் தலைமை வகித்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் முத்துராமன், மாவட்ட பிரதிநிதிகள் செல்வம், ஆறுமுகம், மாதையன், கணேசன், திருநாவுக்கரசு, பிரபு கண்ணன், மயிலு, ராஜவேல்(எ) முத்துசாமி, விஜயலட்சுமி, பெரியதம்பி, செல்வகுமார், மெடிக்கல் குமார், பாண்டு, கந்தசாமி, பழனிசாமி, அன்பு, சரவணன், அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

The post திமுக சார்பில் மகளிர் தின கோலப்போட்டி appeared first on Dinakaran.

Tags : Women's day ,DMK ,Eadpadi ,day ,Eadpadi, Konkanapuram ,International Women's Day ,City Secretary ,Pasha ,Women's Day Goal Contest ,Dinakaran ,
× RELATED இடைப்பாடி அருகே பயங்கரம் விவசாயி திருப்புளியால் குத்திக்கொலை