×

கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி, மார்ச் 8: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம் மகன் அருள். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி வழியாக உளுந்தூர்பேட்டை நோக்கி தனது காரில் நேற்று சென்றனர். அப்போது அருள் தம்பியின் மனைவி பிரசவத்திற்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை பார்த்துவிட்டு செல்வதற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு மதியம் சுமார் 12 மணியளவில் வந்தனர். காரை மருத்துவமனை முன் நிறுத்திவிட்டு அருள் உள்ளிட்ட 4 பேரும் மருத்துவமனைக்கு உள்ளே சென்றனர். இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் இன்ஜின் பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்த அருள் மற்றும் பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீர் பீய்ச்சியடைத்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். காரில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Chidambaram ,Arul ,Sengurichi ,Ulundurpet ,Kallakurichi district ,Salem ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...