×

பைக் விபத்தில் ஜவுளி கடை ஊழியர் பலி

தூத்துக்குடி, மார்ச் 8: புதியம்புத்தூர் அருகேயுள்ள மேலமடம் பகுதியைச் சேர்ந்தவர் மணி மகன் முத்துராஜா (33). இவர், தூத்துக்குடியில் உள்ள ஜவுளிக் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்து பைக்கில் வீடு திரும்பினார். நயினார்புரம் விலக்கு ரயில்வே மேம்பாலத்திற்கு அருகில் சென்றபோது எதிர்பாராதவிதமாக பைக் சறுக்கி விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் முத்துராஜாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துராஜா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக் விபத்தில் ஜவுளி கடை ஊழியர் பலி appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Mani Makan Muthuraja ,Melamadam ,Nayambuthur ,Nayanarpuram ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...