×

ராமநாதபுரம்-ராமேஸ்வரம் வரை நெடுஞ்சாலையை ஆக்கிரமிக்கும் மரங்கள்

மண்டபம், மார்ச் 7: ராமநாதபுரம் மாவட்டம் பட்டணக்காத்தான் ஊராட்சி பகுதியான கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து மண்டபம் கடற்கரை பூங்கா, ராமேஸ்வரம் வரை 60 கிலோ மீட்டர் தொலை தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாக ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அரசு பேருந்து மற்றும் வர்த்தக ரீதியான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சொந்த வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் உட்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.

இந்நிலையில் மதுரையில் இருந்து ராமநாதபுரம், மண்டபம் ராமேஸ்வரத்திற்கு வருத்தக ரீதியாக தினசரி காய்கறி மற்றும் மளிகை சாமான்கள், தளவாட சாமான்கள் மற்றும் கடலோரப் பகுதியில் படகுகளுக்கு தேவையான பொருள்கள், கால்நடைகளுக்கு வைக்கோல் உள்பட பல வகையான பொருள்களை பெரிய லாரிகளில் பொதுமக்கள் கொண்டு வருகின்றன.

அதுபோல கடலோர பகுதியான ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதியில் இருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு பெரிய லாரிகள் மற்றும் மினி வேன்களில் வெளியூர்களுக்கு மீன்களை வியாபாரிகள் கொண்டு செல்கின்றன.

இந்நிலையில் இந்த தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் இருபுறமும் பெரிய பெரிய மரங்கள் அமைந்துள்ளது. அதுபோல பனை மரம், கருவேல மரம் உள்பட பல வகையான மரங்களும் சாலையின் இருபுறமும் அருகே வளர்ந்து வருகிறது. இந்த மரங்களில் இருந்து கிளைகள் வளர்ந்து தேசிய நெடுஞ்சாலை முழுவதும் மேவி வருகிறது. இதனால் இந்த வாகனங்களில் பொருள்களை கொண்டு செல்லும்போது மரக்கிளைகளில் வாகனங்கள் மோதுகிறது.

சாலையில் இருபுறமும் மரங்களில் உள்ள கிளைகள் ஒன்றிணைந்து நிற்கும் போது பார்ப்பதற்கு அழகாக காட்சியளித்தாலும் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் கிளைகள் அமைந்துள்ளது. ஆதலால் சாலையை ஆக்கிரமித்துள்ள மரக்கிளைகளை அகற்றுவதற்கு தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்
தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ராமநாதபுரம்-ராமேஸ்வரம் வரை நெடுஞ்சாலையை ஆக்கிரமிக்கும் மரங்கள் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram-Rameswaram ,Mandapam ,Highway ,East Beach Road ,Pattanakkathan Panchayat ,Ramanathapuram District ,Mandapam Beach Park, ,Rameswaram ,Ramanathapuram ,
× RELATED தேங்கி கிடக்கும் பாலித்தீன் குப்பைகள் அழகை இழந்து வரும் அரியமான் கடற்கரை