×

2 இளம்பெண்கள் அடுத்தடுத்து மாயம்

சேலம், மார்ச் 7: சேலம் மணியனூர் சக்தி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் ஜா (19). கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய இவர், அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அன்னதானப்பட்டி போலீசில் அவரது தாய் ரமணி புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாவை தேடி வருகின்றனர். இதேபோல், கன்னங்குறிச்சி கே.எஸ்.ஆறுமுகம் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் கிருத்திகா (18). அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 4ம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற கிருத்திகா, அதன்பின்னர் வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிருத்திகா கிடைக்காததால், இதுகுறித்து அவரது தந்தை கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 2 இளம்பெண்கள் அடுத்தடுத்து மாயம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Mariyappan ,Manianur Sakthi Kaliamman Koil Street, Salem ,ja ,Annadanapatti ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...