×

சிறுமி விஷம் குடித்து சாவு

கிருஷ்ணகிரி, மார்ச் 7: காவேரிப்பட்டணம் அடுத்த மலையாண்டஅள்ளி போயர் தெருவைச் சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகள் ஜமுனா (17), கூலிவேலை செய்து வந்தார். இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனவேதனையில் இருந்தவர், கடந்த 1ம்தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, ஜமுனா நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுபற்றி காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிறுமி விஷம் குடித்து சாவு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Muniyappan ,Boyar Street, Malayandaalli ,Kaveripatnam ,Jamuna ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்