×

விஷம் குடித்து தொழிலாளி சாவு

பண்ருட்டி, மார்ச் 6: பண்ருட்டியை அடுத்த மேல்கவரப்பட்டு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(47), கூலி தொழிலாளி. இவர் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவார் என கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு வழக்கம் போல குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். ஏன் தினமும் குடித்துவிட்டு வருகிறீர்கள் என்று மனைவி குமாரி (40) கேட்டுள்ளார். இந்நிலையில், வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து ஆறுமுகம் குடித்துள்ளார். இதனால் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அவரை பண்ருட்டி அரசு மருத்துவனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விஷம் குடித்து தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Tags : Panruti ,Arumugam ,Perumal Koil Street ,Dinakaran ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு