×

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் அறந்தாங்கியில் இன்று நடக்கிறது

புதுக்கோட்டை, மார்ச் 5: உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்“ அனைத்து அரசுத்துறைகளும் ஒன்றிணைந்து ஒற்றைச்சாளர முறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் அறந்தாங்கி வட்டாரத்தில் இன்று (5ம்தேதி) அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.

‘உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்” நடைபெற்ற அறந்தாங்கி வட்டாரம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (5ம்தேதி) காலை 10.மணி முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்குதல், ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவு செய்தல், காப்பீட்டு அட்டை பதிவு செய்தல், ஆதார் அட்டை பதிவேற்றம் செய்ய முடியாத கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முகாமில் ஆதார் அட்டை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல், வங்கிக்கடன் உதவி பரிந்துரை, உதவி உபகரணங்கள் பரிந்துரை, இலவச வீடு, வீட்டுமனை பட்டா, கூட்டுறவு வங்கியின் மூலமாக தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதியுதவி கழகத்தின் வட்டியில்லா கடனுதவி மற்றும் பிற அரசுத்துறைகள் மூலமாக வழங்கப்படும் உதவிகள் பரிந்துரைகள் செய்வதற்கு அனைத்து அரசுத்துறைகளும் ஒருங்கிணைத்து சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

எனவே, அறந்தாங்கி வட்டாரத்தைச் சார்ந்த உதவிகள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் 6 ஆகியவற்றுடன் முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தெரிவித்துள்ளார்.

The post உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் அறந்தாங்கியில் இன்று நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Aranthangi ,Pudukottai ,Arantangi district ,Arantangi ,Panchayat Union ,
× RELATED அறந்தாங்கி பகுதியில் நெடுஞ்சாலை பணிகள் தரமாக நடந்ததா?