×

கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை: 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

 

ஈரோடு, மார்ச் 6: கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்றதாக ஈரோடு, கருங்கல்பாளையம், குயிலன் தோப்பு, பொன்னுசாமி சாலையைச் சேர்ந்த தினேஷ்குமார் (32), ராஜஸ்தான் மாநிலம் காராபோர்ட்டா, செளதர்யாகாவாஸ் பகுதியைச் சேர்ந்த, தற்போது ஈரோடு, கொங்கலம்மன் கோயில் கிழக்குத் தெருவில் வசித்து வந்த பரத்குமார் (32) மீது சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபியில் உள்ள மாவட்ட கிளைச் சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து, குற்றச் சம்பவங்களை தீவிரமாக தடுக்கும் வகையில் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி ஜவகர் பரிந்துரைத்தார். இதையடுத்து, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவின் படி தினேஷ்குமார், பரத்குமார் ஆகிய இருவரும் கோவை மத்தியச் சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.

The post கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை: 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Guntas ,Erode ,Sidodu ,
× RELATED மாநகராட்சி பணியாளர்களுக்கு நீர் ஆகாரங்கள் வழங்கல்