×

போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்டது பாஜகதான்: அமைச்சர் ரகுபதி பேட்டி

குமரி: போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்டது பாஜகதான் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், தமிழ்நாட்டில் அமைதியான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, யாரும் குழப்பத்தை விளைவிக்க முடியாது. போதைப்பொருள் வழக்குகளில் 80%-க்கும் மேல் தண்டனை பெற்றுத் தந்துள்ளது தமிழ்நாடு அரசு. தேர்தலுக்காக தமிழ்நாடு அரசு மீது பிரதமர் மோடி பழிபோடுவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று குறிப்பிட்டார்.

The post போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்டது பாஜகதான்: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Minister ,Raghupathi ,Kumari ,Tamil Nadu ,
× RELATED புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தில்...