×

அடிக்கடி ஏற்படும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு தாமிரபரணி குடிநீர் திட்டக்குழாய் அமைக்கும் பணியை எம்எல்ஏ ஆய்வு

 

ராஜபாளையம் மார்ச் 5: ராஜபாளையம் அருகே தளவாய்புரம் முதல் முகவூர் செல்லும் சாலையில் நீண்ட நாட்களாக தாமிரபரணி குடிநீர் திட்டக்குழாய் அடிக்கடி உடைவதால் அப்பகுதியில் சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது, இதனை சரிசெய்யும் நோக்கில் செட்டியார்பட்டி பேரூராட்சி, சேத்தூர் பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் நெடுஞ்சாலை துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் என ஐந்து நிர்வாகங்கள் தலையிட வேண்டியதால் காலதாமம் ஏற்பட்டது.

இதன் காரணமாக ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (2024-2025)ல் முன் அனுமதி பெற்று தற்போது முகவூர் மெர்கண்டைல் வங்கி முதல் முத்துச்சாமியாபுரம் கூட்டுறவு சங்க வங்கி வரை தாமிரபரணி குடிநீர் திட்டக்குழாய் பதிக்கப்படவுள்ளது.
இந்த குழாய் அமைக்கும் பணி தொடர்பாக ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் உதவி செயற்பொறியாளர் ஆறுமுக சிவசண்முகவள்ளி ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் சுரேஷ் கிளைச்செயலாளர் தொந்தியப்பன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post அடிக்கடி ஏற்படும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு தாமிரபரணி குடிநீர் திட்டக்குழாய் அமைக்கும் பணியை எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Tags : MLA ,Tamiraparani ,Rajapalayam ,Dalavaipuram ,Mugur ,Chettiarpatti ,Settur ,Dinakaran ,
× RELATED தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...