×

பெரம்பலூர் அருகே விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனம் சிக்கியது

பெரம்பலூர், மார்ச்3: கடலூர் மாவட்டம், வேப்பூர், அடரி, நடுத்தெருவைச் சேர்ந்தவர் நல்லதம்பி மகன் சதீஷ்குமார்(24). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 10 ம்தேதி திருச்சி சமயபுரம் கோயிலுக்கு பாத யாத்திரையாக சென்று கொண்டிருந்தார். பெரம்பலூர், நான்கு ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே சதீஷ்குமார் உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்றது. இந்த விபத்து குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பி பழனிச்சாமி வழிகாட்டுதலின்படி பெரம்பலூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமை யிலான குழு, விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து வழியில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் குறிப்பிட்ட எண் கொண்ட டிராவல்ஸ் வாகனம் விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்தது. மேலும் வாகனத்தை ஓட்டியது பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்கா தேவையூர் ஊராட்சி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் (37) என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து நேற்று செல்வகுமார் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்த இன்ஸ்பெக்டர் கருணாகரன் அவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

The post பெரம்பலூர் அருகே விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனம் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Satish Kumar ,Nallathambi ,Adari, Veypur, Cuddalore district ,Trichy Samayapuram Temple ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி