×

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மதுரை, மார்ச். 3: மதுரை அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்க செயின் பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரையை அடுத்த ஒத்தக்கடை நீதிநகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி விஜயலட்சுமி (68). இரு தினங்களுக்கு முன், இவர் இரவு நேரத்தில் வீட்டின் முன்பாக அடுத்தவீட்டில் வசிக்கும் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, டூவீலரில் வந்த மர்மநபர் முகவரி கேட்பது போல் விஜயலட்சுமியின் கழுத்தில் கிடந்த 11 சவரன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து, விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post மூதாட்டியிடம் செயின் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Ancestral Chain Flush ,Madurai ,Rajendran ,Vijayalakshmi ,Othakada Nidinagar ,Ancestor Chain Flush ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை