×

தூத்துக்குடியில் பணமோசடி செய்தவர் மீது வழக்கு

தூத்துக்குடி, மார்ச் 2: தூத்துக்குடியில் தவணை முறையில் ரூ.50 ஆயிரம் பணம் செலுத்தினால் நிலம் தருவதாக கூறி பணமோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி தெர்மல்நகர், கேம்ப் 1 பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் ராமஜெயம்(39). இவர் தபால்தந்திகாலனி 12வது தெருவைச் சேர்ந்த ஜெபபெருமாள் மகன் விவேகானந்தா(70) என்பவரிடம் 5 சென்ட் நிலம் வாங்குவதற்காக தவணை முறையில் ரூ.50 ஆயிரம் பணம் செலுத்தியுள்ளார். பணத்தை வாங்கிய பிறகு விவேகானந்தா நிலத்தை கொடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் ராமஜெயம், விவேகானந்தாவிடம் நிலத்தை தராவிட்டால் பணத்தை திருப்பித்தருமாறு கேட்டுள்ளார். இதையடுத்து அவர் ரூ.7 ஆயிரம் மட்டும் திருப்பி கொடுத்துவிட்டு மீதம் ரூ.43 ஆயிரத்தை திருப்பிக்கொடுக்காமல் இருந்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் ராமஜெயம் அளித்த புகாரின்பேரில் மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் சோபாஜென்சி வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்.

The post தூத்துக்குடியில் பணமோசடி செய்தவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Ramajayam ,Chellathurai, Camp 1 ,Thoothukudi Thermal Nagar ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...