×

பேரூராட்சி கூட்டத்தில் பங்கேற்க கவுன்சிலருக்கு தடை

 

தேனி, மார்ச் 1: தேனி அருகே பேரூராட்சி சார்பில் நடைபெற உள்ள இரண்டு கூட்டங்களில் பங்கேற்க கவுன்சிலருக்கு தடை விதிக்கப்பட்டது. தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று சாதாரண மன்ற கூட்டம் நடந்தது கூட்டத்திற்கு பேரூராட்சி சேர்மன் வக்கீல் மிதுன்சக்கரவர்த்தி தலைமை வகித்தார். துணை சேர்மன் மணிமாறன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் மொத்தம் உள்ள 15 கவுன்சிலர்களில் 9 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது மொத்தம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 3வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளரை அநாகரிகமாக பேசியது குறித்து பேரூராட்சி நிர்வாகம் எச்சரித்தும் , விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியும் முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவர் வருகிற 2 மன்ற கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு தடை விதித்து சஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post பேரூராட்சி கூட்டத்தில் பங்கேற்க கவுன்சிலருக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Theni ,Palanisettipatti ,Dinakaran ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...