×

தேவகோட்டை அருகே அரசு பள்ளியில் ஐம்பெரும் விழா

தேவகோட்டை, மார்ச் 1: தேவகோட்டை அருகே புளியால் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, பெயர் பலகைகள் திறப்பு விழா, மரக்கன்றுகள் நடும் விழா, குடிநீர்த் தொட்டி கால்கோல் விழா ஆகிய ஐம்பெரும் விழா நடைபெற்றது. ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் வரவேற்றார். தலைமையாசிரியர் நாகேந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலர் உதயகுமார் தலைமை வகித்து பரிசுகள் வழங்கினார்.

உதவி மாவட்டத் திட்ட அலுவலர் பீட்டர் லெமாயு, வட்டாரக் கல்வி அலுவலர் மாலதி, ஜெயம் லயன்ஸ் சங்க தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர். தேவகோட்டை ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன், மாவட்டக் கவுன்சிலர் செந்தில்குமார் ஆகியோர் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். மரக்கன்றுகள் நட்டும் பெயர் பலகைகளை திறந்து வைத்து விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினர்.

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜோசப், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் தேவி, முன்னாள் மாணவர் சங்க தலைவர் பெரியசாமி, ஆனந்த், எட்வர்ட், பிச்சை முகம்மது,சூசன்னா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், புளியால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவ,மாணவிகளின் நடனம், சிலம்பு, கராத்தே,பிரமிடுகள் செய்து காண்பித்து அசத்தினர்.

The post தேவகோட்டை அருகே அரசு பள்ளியில் ஐம்பெரும் விழா appeared first on Dinakaran.

Tags : Five Great Celebration ,Devakottai ,Puliyal ,Government ,High School ,Teacher ,Joseph… ,
× RELATED தேவகோட்டையில் 1500 மதுபாட்டில்கள் பறிமுதல்