×

வாலிபரை மிரட்டி பணம் பறித்தவர் கைது

சேலம், பிப்.29: சேலம் கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் முருகன் (30). இவர் நேற்று முன்தினம் இரவு கிச்சிப்பாளையம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த பிரகாஷ் மகன் தாமரைச்செல்வன் (33), முருகனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் சட்டை பாக்கெட்டில் இருந்த ₹3 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பியோடிவிட்டார். இது குறித்து முருகன் கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இப்புகாரின்பேரில் போலீசார் தாமரைச்செல்வனை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இது குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post வாலிபரை மிரட்டி பணம் பறித்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Murugan ,Kasthuribai Street, Kichipalayam, Salem ,Kichipalayam road ,Prakash ,Thamaraichelvan ,
× RELATED தடையை மீறி ஆர்ப்பாட்டம் பாஜகவினர் 80 பேர் கைது