×

I.N.D.I.A. கூட்டணி வலுப்பெற்று வருவதால் மோடியின் பேச்சில் பயம் தெரிகிறது: காங். ரஞ்சன்குமார்

சென்னை: இந்தியா கூட்டணி வலுப்பெற்று வருவதால் மோடியின் பேச்சில் பயம் தெரிகிறது என்று மாநில காங். எஸ்.சி. பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு பச்சைத்துரோகம் செய்துவிட்டு ஏதோ அள்ளிக்கொடுத்ததை போல மோடி நாடகம். ஊழலுக்கு எதிரானவர் போல் வேடமிடும் மோடி, ஜெயலலிதா சிறந்த முதல்வர் என சான்றிதழ் தந்துவிட்டுப் போயிருக்கிறார். ரபேல் விமான பேர ஊழல் முதல் தேர்தல் பத்திரம் வரை பாஜகவின் யோக்கியதை பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுள்ளது. அதனால் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவருக்கு நற்சான்றிதழை மோடி தந்தது ஒன்றும் ஆச்சரியமில்லை என்று அவர் கூறினார்.

The post I.N.D.I.A. கூட்டணி வலுப்பெற்று வருவதால் மோடியின் பேச்சில் பயம் தெரிகிறது: காங். ரஞ்சன்குமார் appeared first on Dinakaran.

Tags : I.N.D.I.A. ,Modi ,Kong ,Ranjankumar ,Chennai ,State Cong ,India ,S. C. Ranjangkumar ,Tamil Nadu ,Kong. ,Ranjangkumar ,
× RELATED காங். தேர்தல் அறிக்கை குறித்து...