×

மரக்காணம் அருகே விவசாய நிலத்தில் இருந்த தர்பூசணி பழங்களை கத்தியால் வெட்டி சேதப்படுத்திய மர்ம நபர்கள்

*போலீசார் தீவிர விசாரணை

மரக்காணம் : மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தில் உள்ள புதிய தெரு பகுதியை சேர்ந்தவர் பொற்குணன் (44). இவரது அண்ணன் கேசவன் (47). இவர்கள் இருவரும் அதே பகுதியில் மரக்காணம்-திண்டிவனம் சாலை ஓரம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி சாகுபடி செய்திருந்தனர். இதில் தர்பூசணி பழங்கள் நன்கு வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் இவர்களின் வயல்களில் இறங்கி அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த தர்பூசணி பழங்களை கத்தியால் வெட்டியும், இரும்பு கம்பியால் உடைத்தும் சேதப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை பொற்குணன் தனது வயலுக்கு சென்றுள்ளார். அப்போது தனது வயலில் இருந்த தர்பூசணி பழங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து தனது வயலில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தர்பூசணி பழங்களை மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி சேதப்படுத்தி விட்டதாக மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கத்தியால் வெட்டி சேதப்படுத்திய தர்பூசணி பழங்களை பார்வையிட்டு அவைகளை சேதப்படுத்திய நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post மரக்காணம் அருகே விவசாய நிலத்தில் இருந்த தர்பூசணி பழங்களை கத்தியால் வெட்டி சேதப்படுத்திய மர்ம நபர்கள் appeared first on Dinakaran.

Tags : Marakanam ,Porkunan ,New Street ,Kandadu ,Kesavan ,Marakkanam-Tindivanam ,Marakkanam ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழா பிரச்னையால் தேர்தல்...