×

அறக்கட்டளை ஊழல் வழக்கு இம்ரானிடம் நீதிபதி விசாரணை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான்(71) மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதில் 2 ஊழல் வழக்குகளில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீவி ஆகியோருக்கு கடந்த 31ம் தேதி 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, இருவரும் ராவல்பிண்டியிலுள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அல்-காதிர் அறக்கட்டளையுடன் தொடர்புடைய ரூ.19 கோடி ஊழல் வழக்கில் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீவி ஆகியோரிடம் பாகிஸ்தான் பொறுப்பு கூறல் நீதிமன்ற நீதிபதி நேற்று சிறையில் விசாரணை நடத்தினார்.

The post அறக்கட்டளை ஊழல் வழக்கு இம்ரானிடம் நீதிபதி விசாரணை appeared first on Dinakaran.

Tags : Imran ,Islamabad ,Pakistan ,Pakistan Tehreek-e-Insaf ,Imran Khan ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா