×

வாசுதேவநல்லூர் அருகே கார் மோதி தொழிலாளி பலி

சிவகிரி, பிப். 27: வாசுதேவநல்லூர் அருகே பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த தொழிலாளி, கார் மோதியதில் பரிதாபமாக இறந்தார். விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். வாசுதேவநல்லூர் அருகேயுள்ள தரணி நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (48). தொழிலாளியான இவர் நேற்று ஆத்துவழி விலக்கு பஸ் ஸ்டாப் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த கார் திடீரென ஈஸ்வரன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஈஸ்வரன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து விரைந்துவந்த வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார், ஈஸ்வரனின் உடலை கைப்பற்றி சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிந்தபோலீசார், விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த கேரள மாநிலம் புனலூர் சாலகோடு பகுதியைச் சேர்ந்த அசரப் மனைவி சகிதபானு (30) என்பவரை கைதுசெய்தனர்.

The post வாசுதேவநல்லூர் அருகே கார் மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Vasudevanallur ,Shivagiri, Pip ,Iswaran ,Darani ,
× RELATED வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாத சுவாமி...