×

பங்காருபேட்டையில் வியாபாரியிடம் 2.5 கிலோ தங்க நகைகள் பறிப்பு: மர்மநபர்களுக்கு போலீசார் வலை

தங்கவயல்: பங்காரு பேட்டையில், நகை வியாபாரியிடமிருந்து சுமார் 2.5 கிலோ தங்க நகைகளை மர்மநபர்கள் பறித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. பெங்களூருவை சேர்ந்தவர் கவுதம் சந்த், தங்க நகை வியாபாரி. இவர் பெங்களூருவில் தயார் செய்யப்பட்ட தங்க நகைகளை பங்காருப்பேட்டை மற்றும் தங்கவயலில் உள்ள நகைக்கடைகளுக்கு வழங்குவதற்காக டூ வீலரில் சென்றார். பங்காருப்பேட்டை பஸ் நிலையம் அருகே தக்காளி வாங்க பைக்கை நிறுத்தினார். இவர் பைக்கில் அமர்ந்து தக்காளி வாங்கிக் கொண்டிருந்த போது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த இருவர் தங்கநகைகள் இருந்த பையை பறித்துக் கொண்டு தப்பித்து ஓடினர். இதுகுறித்து தங்கநகை வியாபாரி கவுதம் சந்த், பங்காருப்பேட்டை போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் எஸ்.பி. கே.எம்.சாந்தராஜு பார்வையிட்டார். இதுகுறித்து பங்காருப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post பங்காருபேட்டையில் வியாபாரியிடம் 2.5 கிலோ தங்க நகைகள் பறிப்பு: மர்மநபர்களுக்கு போலீசார் வலை appeared first on Dinakaran.

Tags : Bangarupettai ,Thangavyal ,Bangaru Pettah ,Gautham Chand ,Bengaluru ,Bangarupet ,Dinakaran ,
× RELATED தனியார் பள்ளியில் 27 மாணவர்களுக்கு...