- மார்த்தாண்டம்
- விஜயகுமார்
- பனவிலை
- கொல்லங்கோடு, கன்னியாகுமரி மாவட்டம்
- பட்டந்தலமூட் அரசு போக்குவரத்து கழகம்
- தின மலர்
மார்த்தாண்டம், பிப்.25: கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பனவிளை பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (49 ) . இவர் படந்தாலுமூடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் உண்டு. நேற்று விடுமுறை என்பதால் குழித்துறை அடுத்த கழுவன்திட்டை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில் விஜயகுமார் மீது மோதியது. இதில் உடல் சிதைந்து விஜயகுமார் பரிதாபமாக மரணம் அடைந்தார். ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ரயில் மோதி அரசு பஸ் டிரைவர் பரிதாப சாவு appeared first on Dinakaran.