×

பாம்பு கடித்து விவசாயி பலி

கடையநல்லூர், பிப்.25: அச்சன்புதூர்- நெடுவயல் பார்வதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கரபாண்டியன் (57). விவசாயியான இவர் கம்பனேரியில் உள்ள உறவினரின் தோப்பில் விவசாய பணிகளை மேற்பார்வையிட்டு வந்தார். நேற்று முன்தினம் மாலையில் தோப்பில் உள்ள விவசாய நிலத்தில் நடந்து சென்றபோது அங்கு கிடந்த கட்டுவிரியன் பாம்பு மிதித்ததில் சங்கரபாண்டியை கடித்துள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post பாம்பு கடித்து விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Kadayanallur ,Shankarapandian ,Achanputur- Neduvayal Parvathi Amman Kovil Street ,Kampaneri ,
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது