×

மீனவர் பிரச்சனை: ஒன்றிய அரசு தீர்வுகாண அனிதா ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய – இலங்கை கடற்பகுதியில் இருநாட்டு மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இந்திய – இலங்கை கூட்டுப்பணிக்குழு கூட்டம் நீண்டகாலமாக நடத்தப்படாமல் உள்ளது. இந்திய – இலங்கை கூட்டுப்பணிக்குழு கூட்டத்தை உடனே நடத்த வேண்டும். இலங்கையில் உள்ள படகுகளை மீட்க எந்தவொரு நடவடிக்கையும் ஒன்றிய அரசு இதுவரை எடுக்கவில்லை. இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க மீட்புக்குழு இலங்கை செல்ல அனுமதி தர வேண்டும் எனவும் கூறினார்.

The post மீனவர் பிரச்சனை: ஒன்றிய அரசு தீர்வுகாண அனிதா ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anita Radhakrishnan ,Union government ,Chennai ,Minister ,Anitha Radhakrishnan ,India-Sri Lanka Cooperation Committee ,Sri Lanka… ,
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...