×

ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட கனிமொழி எம்பி வெற்றிக்கு விழிப்புடன் பணியாற்ற வேண்டும்

*திமுகவினருக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

தூத்துக்குடி : இந்தியாவில் சமதர்ம ஆட்சி அமைந்திட தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி எம்பியின் வெற்றிக்கு கண் துஞ்சாது விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று திமுகவினரை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி எம்பியை ஆதரித்து தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தீவிர களப்பணியாற்றி வருகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி கடந்த சில நாட்களாக நெல்லை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூசுக்காக அங்கு சென்று பணியாற்றி வரும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நேற்று முன்தினம் ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ்கனிக்காக மீனவ மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இந்நிலையில் நேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட வைகுண்டம், திருச்செந்தூர் பகுதியில் தேர்தல் பணியாற்றி வரும் திமுகவினரை சந்தித்து தேர்தல் பணியை தீவிரப்படுத்த ஆலோசனை வழங்கினார்.

அப்போது அவர், கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்றுவரும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜ ஆட்சியில் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி உள்ளனர். வரும் மக்களவை தேர்தலில் இந்தியாவில் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சாதி, மத பேதமில்லாத சமதர்ம ஆட்சி அமைந்திட இந்தியா கூட்டணி சார்பில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் கனிமொழி எம்பிக்கு சரித்திர சாதனையுடன் கூடிய வெற்றியை பெற்றுக் கொடுக்கும் வகையில் திமுகவினர் கண் துஞ்சாமல் கூட்டணி கட்சியினருடன் இணைந்து விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அப்போது மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் எஸ்.ஜே.ஜெகன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் வாள் சுடலை, நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணல்மேடு சுதாகர், தெற்கு மாவட்ட காங். பொதுச்செயலாளர் பிச்சிவிளை சுதாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட கனிமொழி எம்பி வெற்றிக்கு விழிப்புடன் பணியாற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kanimozhi ,Samadharma ,Minister ,Anitha Radhakrishnan ,DMK ,Tuticorin ,Lok ,Sabha ,India ,Anita Radhakrishnan ,
× RELATED நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல்;...