×

போதைப்பொருட்கள் விற்ற 274 கடைகளுக்கு ஒரே நாளில் சீல் அதிகாரிகள் நடவடிக்கை வேலூர் உட்பட 3 மாவட்டங்களில்

வேலூர், பிப்.22: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்ற 274 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி, திருப்பத்தூர் கலெக்டர் தர்ப்பகராஜ், ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி ஆகியோர் உத்தரவின்பேரில் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்று முன்தினம் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உள்ளிட்ட பல்ேவறு போதை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 274 கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனர். மேலும் ₹26 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 234 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post போதைப்பொருட்கள் விற்ற 274 கடைகளுக்கு ஒரே நாளில் சீல் அதிகாரிகள் நடவடிக்கை வேலூர் உட்பட 3 மாவட்டங்களில் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Food Safety Department ,Tirupattur ,Ranipet ,Collector ,Subbulakshmi ,Darpakharaj ,Varamati ,
× RELATED ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuits) குழந்தைகள்...